முகப்பு /செய்தி /விளையாட்டு / சச்சினை சதா திட்டிக் கொண்டே இருந்தார் ஷாகித் அப்ரீடி - மனம் திறந்த சேவாக்

சச்சினை சதா திட்டிக் கொண்டே இருந்தார் ஷாகித் அப்ரீடி - மனம் திறந்த சேவாக்

பாகிஸ்தான் வீரர்கள் கடவுளை வேண்ட கிரிக்கெட் கடவுள் சச்சின் பார்த்துக் கொண்டிருக்கிறார்

பாகிஸ்தான் வீரர்கள் கடவுளை வேண்ட கிரிக்கெட் கடவுள் சச்சின் பார்த்துக் கொண்டிருக்கிறார்

விளையாட்டின் போது அவருக்கு தசைப்பிடிப்பு இருந்ததால் நான் அவருக்காக ஓட வந்தேன், பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி அவரை அதிகம் திட்டினார், எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் சச்சின் கவனம் செலுத்தினார். அவர் கிரீஸில் நிலைத்திருப்பது முக்கியம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கவுள்ளது. கடந்த ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கசப்பான தோல்வியைத் தழுவிய டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன.

இரு தரப்புக்கும் இடையேயான போட்டிகள் எப்பொழுதும் உக்கிரமாகவும் பரபரப்பாகவும் இருக்கும். மேலும் பல நிகழ்வுகள் மைதானத்தில் வீரர்கள் வாய்மொழி சண்டையில் ஈடுபடும்போதும் நடந்துள்ளது. 2003 உலகக் கோப்பையின் போது இதுபோன்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை எதிர் அணியால் எப்படி குறிவைத்தார் என்பதை வெளிப்படுத்தினார்.

சச்சின் டெண்டுல்கர் உலகின் மிகச்சிறந்த பவுலர்களுக்கு எதிராக ஷாட்களையோ, டிபன்ஸையோ எதையுமே ஆட முடியாத ஷாகித் அஃப்ரீடியெல்லாம் சச்சின் போன்ற பேட்டிங் ஜீனியஸை நோக்கி வசைபாடுகிறார் என்றால் அது காலத்தின் கோலம்தான்.

2003 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அந்தப் போட்டியில் சச்சின் 75 பந்துகளில் 98 ரன்களை எடுத்தார், பார்க் முழுவதும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார், ஆனால் தசைப்பிடிப்பு காரணமாக அவர் சேவாக்கை தனது சார்பாக ஓட அழைத்தார்.

சேவாக் கூறுவதற்கு வருவோம்:

விளையாட்டின் போது அவருக்கு தசைப்பிடிப்பு இருந்ததால் நான் அவருக்காக ஓட வந்தேன், பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி அவரை அதிகம் திட்டினார், எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் சச்சின் கவனம் செலுத்தினார். அவர் கிரீஸில் நிலைத்திருப்பது முக்கியம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

அவர் வழக்கமாக ரன்னர் வைத்துக் கொள்ள மாட்டார். ஆனால் நான் வந்தால், அவர் ஓடுவது போல் நானும் ஓடுவேன் என்று அவருக்குத் தெரியும். எந்த தவறான புரிதலும் இருக்காது.

இது எந்தத் தொடராக இருந்தாலும் (ஐசிசி போட்டி அல்லது இருதரப்பு), இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். மேலும் இரு நாட்டு வீரர்களுக்கிடையே சண்டைகள் அல்லது சம்பவங்கள் நடைபெறுவதை நாம் எப்போதும் பார்ப்போம். மேலும் டாப் ஆர்டரை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று ஷோயப் அக்தர் பேசியது அப்போது வெளியானது எனக்கு நினைவிருக்கிறது. அந்த அறிக்கையை நான் படிக்கவில்லை, சச்சினும் படிக்கவில்லை, ஆனால் எங்கள் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே சச்சின் அதற்கு கடுமையாக பதிலடி கொடுத்தார். அந்த ஓவரில் அவர் 18 ரன்கள் எடுத்தார்.

top videos

    இவ்வாறு கூறினார் சேவாக். அந்தப் போட்டி முதல் 10 ஓவர்களிலேயே முடிந்து விட்டது, சச்சின், சேவாக் தொடக்கம் முடித்து விட்டது என்று பிற்பாடு வக்கார் யூனிஸ் அந்தப் போட்டியைப் பற்றிக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Asia cup, Asia cup cricket, Asia Cup cricket series, India vs Pakistan, Sachin tendulkar, Shahid Afridi, Virender sehwag