முகப்பு /செய்தி /விளையாட்டு / FIFA World Cup 2022: 6வது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா.. கெத்து காட்டிய மெஸ்ஸி!

FIFA World Cup 2022: 6வது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா.. கெத்து காட்டிய மெஸ்ஸி!

மெஸ்ஸி

மெஸ்ஸி

FIFA World Cup 2022 : அர்ஜென்டினா அணி 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • INTER, IndiaQatar

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி மற்றும் அல்வரெஸின் அபார ஆட்டத்தால் குரோஷியாவை வீழ்த்தி, அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், லுசைல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - குரோஷியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது.

ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலாக மாற்றி, அர்ஜென்டினாவுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இப்போட்டியில் குரோஷிய அணி, தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜென்டினா-வின் ஜூலியன் அல்வரெஸ் கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை நிலைநாட்டிய அர்ஜென்டினா அணியில், மேலும் ஒரு கோல் அடித்து, மைதானத்தையே அல்வரெஸ் அதிர வைத்தார். கடைசி வரை போராடியும் குரோஷிய அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனால், 3-0 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது. இதன்மூலம், ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

First published:

Tags: Argentina, Croatia football team captain, FIFA, FIFA World Cup, FIFA World Cup 2022, Tamil News