சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கோவில் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டுதான். திருப்பதி போய்விட்டு வருபவர்கள் லட்டு இல்லாமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டார்கள். திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி ஏழுமலையானின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப்படுகிறது.
அத்தகைட லட்டு திருப்பதி மலையில் தற்போது 24 மணி நேரமும் 50 லட்டு கவுண்டர்கள் மூலம் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகிறது. ஆனாலும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் நாட்களில் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக விரைவில் மேலும் 30 லட்டு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.
மேலும் திருப்பதி மலையில் பக்தர்கள் தங்குவதற்காக 7500 அறையில் உள்ளன. அவற்றில் 5 ஆயிரம் அறைகள் 50 ரூபாய் 100 ரூபாய் வாடகையாக உள்ளது. அந்த அறைகளை சாதாரண பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். அவற்றின் வாடகையை நாங்கள் உயர்த்தவில்லை. அந்த அறைகளில் சுமார் 45 ஆயிரம் சாதாரண பக்தர்கள் இன்னமும் தங்கி செல்கின்றனர்.
மற்ற அறைகள் விஐபி பகுதியில் உள்ளன. அவற்றில் 172 அறைகளை 120 கோடி ரூபாய் செலவு செய்து மேம்படுத்தினோம். புதிதாக மேம்படுத்தப்பட்ட அறைகளில் தற்போது வாட்டர் ஹீட்டர், ஏர் கண்டிஷன், தரமான கட்டில், மெத்தை ஆகியவை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த அறைகளின் வாடகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே திருப்பதி மலையில் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுவதை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். சாதாரண பக்தர்கள் வசதிக்காக திருப்பதி மலையில் இன்னும் ஒரு மெகா மண்டபம் கட்டுமான பணி நடைபெற உள்ளது என்றும் அப்போது அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati, Tirupati laddu