திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் வருகிற 25 ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது . திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை பெறக்கூடிய சுப்ரபாதம் அர்ச்சனை , தோமாலை சகஸ்ர கலசாபிஷேகம் திருப்பாவாடைபோன்ற ஆர்ஜித சேவைகளான ஜூலை மாத டிக்கெட் குலுக்கல் முறையில் வருகிற 25 ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
எனவே பக்தர்கள் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு பதிவு செய்து கொண்டால், குலுக்கலில் தேர்தெடுக்கப்பட்டு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது . எனவே பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் 2 டேஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனையின் மூலம் கிடைக்கப்பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நேரில் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் www. tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் அவற்றை முன்பதிவு செய்யலாம்.
செய்தியாளர் - புஷ்பராஜ், திருப்பதி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.