முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி: மார்ச் மாத அங்கப்பிரதட்சண டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு..!

திருப்பதி: மார்ச் மாத அங்கப்பிரதட்சண டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு..!

திருப்பதி

திருப்பதி

Tirupati | அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தாம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் அங்க பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் நாளை (பிப்ரவரி 11) காலை 11:00 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

எனவே இனிமேல். அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் பெற வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் அங்க பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் நாளை (பிப்ரவரி)  காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

  

இது தவிர இம்மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் கூறி உள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் www.tirupatibalaji.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati