திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், கொரோனா பரவல் தடுக்கும் விதத்தில் தாயாரின் திருவீதி உலா முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயிலுக்குள்தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை நடத்தப்படுகிறது.
முதல் நாளான நேற்று இரவு சின்ன சேஷ வாகனத்திலும், 2-ம் நாளான இன்று காலை பெரிய சேஷ வாகனத்திலும் தாயார் எழுந்தருளினார்.
பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை, சயன அலங்காரத்தில் தாயார் பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்தார். நிகழ்ச்சியில் தேவஸ்தானஅதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இன்று இரவு ஹம்ச வாகன சேவை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.