திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த ஈஸ்வரன்மேடு பகுதியில் விவசாயி அண்ணாமலை என்பவரது நிலத்துக்கு அருகே உள்ள தரிசு நிலத்தை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சிலர் சுத்தம் செய்தனர். அப்போது மண்ணுக்கு அடியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை ஆகியவற்றை கண்டெடுத்தனர்.
இந்தச் செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. இதனால் கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி குணசீலன், உதவியாளர் அருள் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சந்திரபிரகாஷ் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.