பங்குனி மாத சிறப்பு பூஜை... இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது...
பங்குனி மாத சிறப்பு பூஜை... இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது...
சபரிமலை
Sabarimalai | பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 8-ந்தேதியான இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி. வரும் 19 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலில் பங்குனி திருவிழா நாளை 9-ந்தேதி தொடங்குகிறது. பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் நாளை 9-ந் தேதி ஆராட்டு திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைக்கிறார். இதையொட்டி 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும்.
18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10வது நாள் திருவிழா நிறைவு பெறும்.
அதைத்தொடர்ந்து, 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். நாளை முதல் 19 தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.