சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி தரிசனம் நடைபெறும் நிலையில் அங்கு மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இன்று மகர விளக்கு பூஜையை ஒட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மகர ஜோதி தரிசனத்தை காண கோயில் சன்னதியிலேயே தற்போது 3 லட்சத்துக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். பம்பை, புல்மேடு உட்பட 9 இடங்களில் ஜோதியை காண முடியும் என்ற போதும், பெரும்பான்மையான பக்தர்கள் ஜயப்பன் சன்னதியில் இருந்தே காண விரும்புவதால் கூட்டம் அலைமோதுகிறது. மாலை 5.30 மணியளவில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் மற்றும் போர்க் கருவிகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதையடுத்து, மாலை 6 மணியளவில் கோயில் சன்னதிக்கு எதிரே உள்ள பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் ஜோதி சொரூபமாக காட்சியளிக்க உள்ளார்.
ஜோதி தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடிய நிலையில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், பம்பா முதல் சபரிமலை வரை தூய்மை பணிளும் இந்த சங்கம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
சபரிமலை மகர ஜோதி தொடர்பான நிகழ்வுகள் நியூஸ் 18 தொலைக்காட்சியில் இன்று மாலை 4.30 மணி முதல் இறுதி வரை சிறப்பு விருந்தினருடன் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.