முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மாசிமகம் பெளர்ணமி தினம் இன்று... காவிரியில் பக்தர்கள் புனித நீராடி, திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!

மாசிமகம் பெளர்ணமி தினம் இன்று... காவிரியில் பக்தர்கள் புனித நீராடி, திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!

திருச்சி காவிரி

திருச்சி காவிரி

Masi Pournami 2023 | மாசி மகம் நாளில் வரும் பௌர்ணமி தினத்தன்று சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களில் விஷேச அலங்காரங்கள், அபிஷேகம், பிரார்த்தனை, யாகங்கள் போன்றவை வெகுவிமரிசையாக நடைபெறும். அன்றைய நாளில் விரதம் இருந்து கோயில் பூஜையில் பங்கேற்று பலன்களை பெறுங்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மாதந்தோறும் அமாவாசை தினங்கள் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளயபட்ச அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமியன்று, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

இன்றைய தினத்தில், புண்ணிய நதியாம் கங்கை, அனைத்து நதிகள், கடல், ஏரிகள், குளங்களில் கலந்திருப்பதாக ஐதீகம். இதனால், மாசி மகத்தன்று நீர் நிலைகளில் புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் போகும் என்பது ஐதீகம்.

இதன் காரணமாகவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடத்தப்படுகிறது. இதையே வட இந்தியாவில் கும்பமேளாவாக கொண்டாடுகின்றனர்.

காவிரி நீராடுதல்

இத்தகைய சிறப்புமிக்க, பௌர்ணமி தினத்தை ஒட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள், இன்று அதிகாலை முதலே, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி, உத்தமர்கோவில், வயலூர் முருகன் கோயில் உள்ளிட்ட திருத்தலங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

First published:

Tags: Masi Magam, Srirangam, Trichy