முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

திருச்செந்தூர் மாசி திருவிழா

திருச்செந்தூர் மாசி திருவிழா

Tiruchendur| திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா சிகர  நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து தேர் வடம்படித்து இழுத்தனார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India

உலகப் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுமான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா கடந்த 25ந்தேதி  கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான மாசி திருவிழா 12 நாட்கள் நடைபெறும் .

அதன்படி இந்த திருவிழாவின் தொடக்கமாக கொடியேற்ற விழா கடந்த 25ந்தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் இரட்டை மூலவர்களில் ஒருவரான சண்முகர் எதா ஸ்தானத்திலிருந்து  எழுந்துருளி கோவில் திருவீதிகளில் உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.

கடந்த  3 ம் தேதி 7ம் திரு நாள் அன்று, காலையில் சண்முகர் உருக சட்ட சேவையும் தொடர்ந்து  வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் சண்முகர் தங்கச்சப்ரத்தில் எழுந்தருளி சிவப்பு சாத்து திருவீதி உலாவும்  8ம் திருநாளில் 4ந் தேதி    வெள்ளிச் சப்ரத்தில் வெள்ளை சாத்து திருவீதி உலாவும் நடைபெற்றது.

தொடர்ந்து பச்சை கடசல் சப்பரத்தில் சண்முகர் பச்சை சாத்தி  சிறுகோளத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. மார்ச்  ஆறாம் தேதி யும்  10ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. சுவாமி குமர விடங்க பெருமான்  வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருவினார். முதலில்  சிறப்பு பூஜைகளுக்கு பின் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது.

நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி விநாயகர் தேர் நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து பக்தர்களால் குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமியின் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. சுவாமி குமர விடங்க பெருமான் தேரை தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளியுள்ள திருத்தேர்  பக்தர்களால் இழுக்கப்பட்டது.

இதில் பக்தர்களால் அரோகரா முருகா கோஷங்கள் விண்ணை முட்டியது. சுவாமி சன்னதி முன் தொடங்கி கீழ ரத  வீதி,  தெற்கு ரத வீதி, மேலரத வீதி வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர்  நிலையத்தை வந்து சேர்ந்தது . காலை ஏழு முப்பது மணி அளவில் சுவாமியின் திருத்தேர் வடம் பிடித்து எடுக்கப்பட்ட நிலையில் 10 மணி அளவில் தேர் நிலையம் வந்து சேர்ந்தது .

தேர் திருவிழாவை ஒட்டி உள்ளூர் மக்கள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான வெளியூர் மக்களும் திருச்செந்தூரில் அதிகாலையிலேயே குழுமி இருந்தனர். இதனை ஒட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.  அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள்  கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.  11வது திருநாளான நாளை  இரவில்  தெப்ப உற்சவம்  நடைபெற  உள்ளது.

இந்த தேர்த்திருவிழாவில் கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன் அறங்காவலர் குழு தலைவர்  அருள் முருகன் உள்ளிட்டோரும் அற நிலையத்துறை  அதிகாரிகள்,  பக்தர்க.ள் கலந்து கொண்டனர்.

தேர் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  வாகனங்களில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியும் நடைபெற்றது

First published:

Tags: Masi Magam, Murugan, Thoothukudi