சபரிமலை மேல் சாந்தியின் மாமா இறந்ததையடுத்து, சபரிமலை சம்பிரதாயப்படி, சன்னிதானம் பூஜை வழிபாடுகளில் இருந்து 10 நாட்கள் அவர் விலகியுள்ளார். மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரியின் தாயாரின் சகோதரரும், திருச்சூர் பெரிங்கொடுகரை கிழக்கு செருமுகமனை சி.கே.ஜி.நம்பூதிரி மரணமடைந்தார்.
இதனால் சம்பிரதாயப்படி பூஜைகளில் பங்கேற்க முடியாது என்பதால் சபரிமலை மேல்சாந்தி கே ஜெயராமன் நம்பூதிரி 10 நாட்களுக்கு சன்னிதானத்தில் உள்ள சபரி விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டார்.
எனவே இன்று முதல் தினசரி பூஜைகள் உட்பட வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள மண்டல பூஜைக்கு மேல்சாதிக்கு பதிலாக தந்திரி கண்டரரு ராஜீவரு பூஜை முறைகளை ஏற்று நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
மேலும் 10 நாட்கள் நிறைவடைந்த பின் மேல் சாந்தி மீண்டும் சபரிமலை சன்னிதானத்தில் தன்னுடைய சேவையினை தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.