மகா சிவராத்திரிக்கு படையலில் கொழுக்கட்டை சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சை பயறு, கொள்ளு என இவை அனைத்தையும் வைத்து நிவேதனம் செய்வார்கள். அதில் சக்கரைவள்ளி கிழங்கில் பாயசம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
முந்திரி பருப்பு - 1டேபிள் ஸ்பூன்
பாதாம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 3 கப்
ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும் அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்.
2. அதில் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை விட்டு வேக வைக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
3. பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும். 5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்த்து நன்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி வேக வைக்கவும்.
4. பிறகு சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும் பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்.
5. பின்னர் பாதாம் பருப்பை அதன் மேல் தூவி விடலாம். இப்போது சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Maha Shivaratri