முகப்பு /செய்தி /ஆன்மிகம் / விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள்...

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள்...

பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கும், மனித வாழ்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அந்த அவதாரங்களே மனிதர்களுக்கு பல்வேறு உண்மைகளை உணர்த்தக்கூடியவை.

பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கும், மனித வாழ்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அந்த அவதாரங்களே மனிதர்களுக்கு பல்வேறு உண்மைகளை உணர்த்தக்கூடியவை.

பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கும், மனித வாழ்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அந்த அவதாரங்களே மனிதர்களுக்கு பல்வேறு உண்மைகளை உணர்த்தக்கூடியவை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் (அதாவது சிவபெருமான்) தான் உச்ச சர்வ வல்லமையுள்ள கடவுள்களாக கருதப்படுகின்றனர். இந்தியா, நேபால் மற்றும் உலகத்தில் உள்ள பல பகுதிகளில் இந்த மூன்று கடவுள்களுக்கும் பல கோவில்கள் உள்ளது. சிவபெருமானுக்கு மிக அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். அதேபோல விஷ்ணுவும் பிரம்மனும் கூட இந்து மதத்தில் மிக புகழ் பெற்ற கடவுளகள்தான்.

காக்கும் கடவுளான ஸ்ரீ ஹரி விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். இந்த தொகுப்பில் அந்த 10 அவதாரங்கள் பற்றியும் அது உணர்த்தும் தத்துவங்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...

அவை கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. வராக அவதாரம்: ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி. ... வாமண அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன். பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?

1.மச்ச அவதாரம்- உலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம் தான். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது மச்சாவதாரம்.

2.கூர்ம அவதாரம்- reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது கூர்ம அவதாரம்.

3. வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம் பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி விலங்கு உயிரினம்.

4. நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன். பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இது.

5.வாமண அவதாரம்- குள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்.

மேலும் படிக்க... தடைகள் நீங்கி அனைத்து காரியங்களும் சித்தி பெற இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்....

6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.

7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துரைக்கிறது.

8. பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.

9. கிருஷ்ண அவதாரம்- சமூகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள், தர்மம், அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்.

10.கல்கி அவதாரம் – எப்போது எந்த நோக்கத்தில் எதனை உணர்த்த இந்த அவதாரம் எடுக்கப்படும் என்பதை நாம் பகவானிடத்திலேயே முழு உள்ளத்துடன் சமர்பிப்போம்.

வட இந்தியர்கள் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.

மேலும் படிக்க... இன்று மகாசங்கடஹர சதுர்த்தி விரதம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Lord Vishnu, Temple