முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ராமர் முதல் கல்கி வரை.. விஷ்ணுவின் 10 அவதாரங்களும், அவை உணர்த்தும் தத்துவங்களும்.!

ராமர் முதல் கல்கி வரை.. விஷ்ணுவின் 10 அவதாரங்களும், அவை உணர்த்தும் தத்துவங்களும்.!

விஷ்ணுவின் 10 அவதாரம்

விஷ்ணுவின் 10 அவதாரம்

lord vishnu 10 Avatharam | பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கும், மனித வாழ்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அந்த அவதாரங்களே மனிதர்களுக்கு பல்வேறு உண்மைகளை உணர்த்தக்கூடியவை.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் (அதாவது சிவபெருமான்) தான் உச்ச சர்வ வல்லமையுள்ள கடவுள்களாக கருதப்படுகின்றனர். இந்தியா, நேபால் மற்றும் உலகத்தில் உள்ள பல பகுதிகளில் இந்த மூன்று கடவுள்களுக்கும் பல கோவில்கள் உள்ளது. சிவபெருமானுக்கு மிக அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். அதேபோல விஷ்ணுவும் பிரம்மனும் கூட இந்து மதத்தில் மிக புகழ் பெற்ற கடவுள்கள்தான். காக்கும் கடவுளான ஸ்ரீ ஹரி விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். இந்த தொகுப்பில் அந்த 10 அவதாரங்கள் பற்றியும் அது உணர்த்தும் தத்துவங்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...

ஹரியும், சிவனும் ஒன்றுதான்

பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். உலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதாரம் எடுத்து உலகைக் காப்பதாக ஐதீகம்.

பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கும், மனித வாழ்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அந்த அவதாரங்களே மனிதர்களுக்கு பல்வேறு உண்மைகளை உணர்த்தக்கூடியவை.

1.மச்ச அவதாரம்- உலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம் தான். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது மச்சாவதாரம். அதாவது தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். அதாவது மனிதர்களின் பிறப்பு நிகழும் முறை.

2.கூர்ம அவதாரம்- reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது கூர்ம அவதாரம். அதாவது மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

3. வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம். பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி விலங்கு உயிரினம். அதாவது ஆறாம் மாதம் குழந்தையாக தவழ்ந்து, முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

4. நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன். பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இது. அதாவது எட்டாம் மாதம் எழுந்து உட்கார்ந்து, கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம்.

5.வாமண அவதாரம்- குள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன். அதாவது ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது. அதாவது வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமூகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துரைக்கிறது. அதாவது திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

8. பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான். அதாவது  இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9. கிருஷ்ண அவதாரம்- சமூகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள், தர்மம், அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான். அதாவது முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து ; அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

10.கல்கி அவதாரம் – இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

First published:

Tags: Lord Vishnu