வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் முதலில் விளக்கேற்றி விட்டுதான் செய்வது தமிழக மக்களின் வழக்கம். விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. இதில் சிலருக்கு ஒற்றை விளக்கு ஏற்றலாமா? அல்லது இரட்டை விளக்கு ஏற்றுவது தான் விசேஷமா? என்று சந்தேகம் இருக்கலாம். பொதுவாகவே, நம்மால் முடிந்த வரையில் அதிக எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பைத் தரும். எனினும் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதை விட விளக்கின் முகங்கள் எத்தனை என்பதைப் பொறுத்தே அதன் பலன்கள் மாறுபடும்.
இந்நிலையில் இன்று திருகார்த்திகை, வீட்டில் விளக்கு ஏற்றும்போது இந்த சில முக்கியமான இந்த விஷயங்களை கவனியுங்கள்..
ஒரு முகம் - சாந்தமான மன நிலையை தரும்.
இரண்டு முகம் - குடும்பத்தில் துயரங்கள் நீங்கும்; செல்வம் தரும்; சமூகத்தில் மதிப்பு - மரியாதை கூடும்.
மூன்று முகம் - செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும், வெற்றி கிடைக்கும், மனதில் நம்பிக்கை கூடும்.
நான்கு முகம்- சொத்து சுகங்கள் சேரும், ஆரோக்கியம் மேன்மை அடையும்.
ஐந்து முகம் - குறைவு இல்லாத நல் வாழ்க்கை தரும்.
இவை தவிர, வாரம் ஒரு நாள் பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது சாலச் சிறந்தது. எனினும், அதே சமயத்தில் விளக்கு ஏற்றுவதற்கு என்று சில சம்பிரதாயங்கள் உண்டு. அதையும் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். பலன்களும் கிடைக்கும்.
அதில், வீட்டில் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் பெண்கள் ஏற்றுவது சிறப்பு. தீபம் ஏற்றும் பெண் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டுதான் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், உடன் பூ சாற்றி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.
தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்திக்க வேண்டும். இது கூடுதல் பலனைத் தர வல்லது.
Also see... திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம் - முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி!
விளக்கை மலை ஏற்றும் சமயத்தில் அதில் உள்ள தீயை வாயால் ஊதி அணைக்கக்கூடாது. மாறாக மலர்களை கொண்டு அணைக்கலாம் என்பது எல்லோரும் அறிந்த பொது விதி. அதே போல, விளக்கை பந்தம் போல புகை வரும் படியாக எரிக்கக் கூடாது.
கடலை எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது இன்னொரு மகா பாவம். இதனால் வீடு தொடைத்துப் போகும், வம்ச விருத்தி இருக்காது என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. இவை தவிர, தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீப முகம் இருக்கலாம்.
Also see... LIVE: கார்த்திகை தீபம்... திருவண்ணாமலையில் இருந்து சிறப்பு நேரலை
தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம் அல்லது பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்து விளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.
இதுதவிர, விளக்கில் இடும் திரிகளுக்கும் கூட பலன் உண்டு...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam