காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை ஜூன் 30-ந் தேதி தொடங்குகிறது. ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையில் நடந்த அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. 43 நாட்கள் யாத்திரை நடக்கிறது. வழக்கம்போல், ரக்ஷாபந்தன் பண்டிகையன்று யாத்திரை முடிவடையும். கொரோனா கட்டுப்பாடுகளுடன் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக யாத்திரை வரும் பக்தர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் இல்லாமல் தாமாக முன்வந்து ஆதார் அங்கீகாரத்தை சமர்பிக்க வேண்டும் எனவும் அந்நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை 43 நாட்கள் நடக்கிறது. வழக்கம்போல், ரக்ஷாபந்தன் பண்டிகையன்று யாத்திரை முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் யாத்திரை நடைபெறும் என்றும் ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.