முகப்பு /செய்தி /ஆன்மிகம் / விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

விருச்சிகம்

விருச்சிகம்

gurupeyarchi 2022- 2023 kazhiyur narayanan | விருச்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

பரபரப்புக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர்பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே! எல்லோரிடமும் அன்பாக இருக்கும் நீங்கள். உங்களுக்கு யாரேனும் துரோகம் செய்துவிட்டால் பழிக்குபழி வாங்கவும் தயங்க மாட்டீர்கள். இது வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டு இருக்கும்.தூரத்து உறவினர் வகையில் விரும்பதகாத சம்பவங்களும் நடந்து இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் அவர் ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். வக்ரத்தில் சிக்கும் போது அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம். சனிபகவானின் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பானதாகும். அவர் உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார்.

மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். 2023 மார்ச் 29-ந் தேதி உங்கள் ராசிக்கு 4-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல.  ஆனால் அவரின் 3-ம் இடத்துப் பார்வையால் நற்பலனை தருவார். ராகு 6-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார்.காரிய அனுகூலத்தைக் கொடுப்பார். மேலும்அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.

இதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். ராகுவுக்கு நேர் எதிரே பயணிக்கும் கிரகமான கேது தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.பொருளாதார

வளம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.

இனி விரிவான பலனை காணலாம்

குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருப்பது மிகச்சிறப்பானதாகும். மேலும் அவரின் 5-ம் இடத்துப்பார்வையும், 9-ம் இடத்துப் பார்வையும் சாதகமாகவும் அமைந்துள்ளன. இதனால் கடந்த காலத்தை விட நன்மைகள்அதிகம் நடக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் மீதான பொல்லாப்பு மறைந்து மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.உறவினர் வகையில்இருந்து வந்த வீண் பகை மறைந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

இந்த காலத்தில் சனியும், ராகுவும் பல்வேறு முன்னேற்றங்களை தருவார்கள். இதனால் நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படையும். பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும். குடும்பத்தில் வசதிகள் இருக்கும். குருவால் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிட்டும். செல்வாக்கு அதிகரிக்கும்.கணவன்-மனûவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பெண்களால் வீட்டில் பல்வேறு அனுகூலம் ஏற்படும். விருந்து ,விழா என சென்று வருவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். மேல்அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலைஇன்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.போலீஸ்,ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது.

ஆசிரியர்களுக்கு உத்தியோகத்தில் நிலவிவந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். வேலையில் இருந்த வெறுப்புணர்வு மறையும். மருத்துவர்களுக்கு பதவிஉயர்வு சம்பளஉயர்வு போன்றவை கிடைக்கும். உங்கள்கோரிக்கைளை நிறைவேற்றிக் கொள்ளலாம். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வக்கீல்கள் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கடந்தகாலத்தில் எதிரிகளின் இடையூறுகள் உங்களை அவ்வப்போது பாடாய்படுத்தி இருக்கும். இனி அந்த நிலையில் இருந்து விடுபடுவீர்கள். தடையின்றி முன்னேறலாம். உங்கள் ஆற்றல் மேம்படும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். இதனால் வீண் விரையம் தடைபடும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.

கலைஞர்கள் திருப்திகரமான பலனைக் காணபர். புதிய ஒப்பந்தங்கள் பல பெற்று புகழும், பாராட்டும் கிடைக்கபெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். உங்கள்செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். பொதுநல சேவகர்கள் நற்பலனை காணலாம்.

மாணவர்கள்: அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்குச் செல்வர்.

விவசாயிகள் பாசிபயறு நெல், எள், உளுந்து, துவரை, கொண்டைக் கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.

பெண்கள் முன்னேற்றம் அடைவர். குரு குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

உடல்நலம்: பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் பூரண குணம் அடையும். பொருள் விரயம் மறையும்.

பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நாயனாரை வணங்க வு ம். துர்க்கைக்கு பூஜை செய்யலாம். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள்

First published:

Tags: Gurupeyarchi