முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

மேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

மேஷம்

மேஷம்

gurupeyarchi 2022- 2023 kazhiyur narayanan | மேஷம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

சூரியனை உச்சமாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே! நீங்கள்‌ எதிலும்‌ மதியை பயன்படுத்தி முன்னேற்றம்‌ காண்பீர்கள்‌. செவ்வாயே உங்கள்‌ ஆட்சி நாயகன்‌. எனவே இந்த பூமி மீது உங்களுக்கு அளவற்ற பாசம்‌ இருக்கும்‌. இதுவரை குரு பகவான்‌ 11-ம்‌ இடத்தில்‌ இருந்து பல்வேறு நன்மைகளை செய்திருப்பார்‌. குறிப்பாக புதிய பதவியும்‌, சம்பள உயர்வும்‌ கிடைத்திருக்கும்‌. வேலையில்‌ திருப்தி கண்டிருப்பீர்கள்‌.

வியாபாரம்‌ சிறப்பாக இருந்திருக்கும்‌. பணப்புழக்கம்‌ மேம்பட்டிருக்கும்‌. எடுத்த காரியத்தை எல்லாம்‌ வெற்றிகரமாக செய்து முடிந்திருப்பீர்கள்‌. இப்படி பல்வேறு நன்மைகளை தந்த குரு பகவான்‌ இப்போது உங்கள்‌ ராசிக்கு 12-ம்‌ இடத்திற்கு வருகிறார்‌. இது சுமாரான நிலையே. இங்கு அவரால்‌ பொருள்‌ விரயம்‌ ஏற்படும்‌. பல்வேறு தொல்லைகள்‌ உருவாகும்‌. மனதில்‌ நீங்காத வருத்தம்‌ உருவாகும்‌. வீண்‌ அலைச்சல்‌ ஏற்படும்‌. இதனால்‌ நீங்கள்‌ மனம்‌ ஒடிந்துபோய்விட வேண்டாம்‌.

குரு பகவான்‌ கெடுபலனை செய்யும் போது அது உங்களுக்கு இறுதியில்‌ நன்மையிலேயே முடியும்‌. ஆசிரியர்‌ மாணவனை கண்டிப்பது போன்றே குரு பகவான்‌ தண்டனை அமையும்‌. மாணவனை ஆசிரியர்‌ கண்டிப்பது நன்மைக்கே. அவர்‌ ஜுன்‌ 20-ந்‌ தேதி முதல்‌ நவம்பர்‌ 16-ந்தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. அவர்‌ வக்கிரத்தில்‌ சிக்கும்‌ போது கெடுபலனை தரமாட்டார்‌. மாறாக நன்மையே தருவார்‌.

குருபகவான்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌, அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும்‌ மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார்‌. சனிபகவான்‌ 10-ம்‌ இடத்தில்‌ உள்ளார்‌. இதனால்‌ தொழிலில்‌ சிறுசிறு பின்னடைவுகள்‌ ஏற்படலாம்‌. உடல்‌ உபாதைகள்‌ லேசாக நோக செய்யலாம்‌.

இதை கண்டு நீங்கள்‌ அச்சம்‌ கொள்ள வேண்டாம்‌. காரணம்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. அவர்‌ வகிக்ரம்‌ அடைந்தாலும்‌ மகர ராசியிலேதான்‌ இருக்கிறார்‌. எந்த கிரகமும்‌ வக்கிரத்தில்‌ சிக்கும்‌ போது அவரால்‌ சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில்‌ சாதகமற்ற நிலையில்‌ இருக்கும்‌ சனிபகவான்‌ வக்கிரம்‌ அடைந்தால்‌ உங்களுக்கு கெடுபலன்கள்‌ நடக்காது அல்லவா ? இன்னும்‌ சொல்லப்போனால்‌ அவரால்‌ நன்மையே கிடைக்கும்‌.

நிழல்கிரகமான ராகு உங்கள்‌ ராசியில்‌ உள்ளார்‌. இது சுமாரான நிலைதான்‌. இங்கு அவரால்‌ வீண்‌ அலைச்சல்‌ ஏற்படலாம்‌. உங்கள்‌ முயற்சிக்கு பலன்‌ இல்லாமல்‌ போகலாம்‌. ஆனால்‌ அவரது பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு 3-இடமான மிதுனத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்மூலம்‌ நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்‌. பணப்‌ புழக்கம்‌ தாராளமாக இருக்கும்‌. மகிழ்ச்சியும்‌, ஆனந்தம்‌ நிலவும்‌.

கேது 7-ம்‌ இடமான துலாம்‌ ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. 7-ல்‌ கேது இருக்கும்‌ போது மனைவி வகையில்‌ பிரச்சினையையும்‌, அலைச்சலையும்‌ தரலாம்‌. வீண்மனவேதனை உருவாகலாம்‌. எதிரிகளால்‌ பிரச்சினை வரலாம்‌. செலவு அதிகரிக்கும்‌. கணவன்‌-மனைவி ஒருவருக்‌ கொருவர்‌ விட்டுக்‌ கொடுத்து போகவும்‌. உறவினர்‌ வகையிலும்‌ அவ்வளவு அனுகூலம்‌ காணப்படவில்லை. உறவினர்கள்‌ வகையில்‌ சற்று ஒதுங்கி இருக்கவும்‌.

இருப்பினும்‌ ராகுவின்‌ பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்பார்வை மூலம்‌ அவர்‌ மகிழ்ச்சி அதிகரிக்கும்‌. புத்தாடை அணிகலன்‌ வாங்கலாம்‌ சகோதரிகளால்‌ பண உசவி கிடைக்கும்‌. 2023 மார்ச்‌ மாகச்சிற்கு பிஈக குடும்பக்கில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில்‌ காற்று வீசுவதால்‌ முக்கிய பொறுப்புகளை அவர்கள்‌ வசம்‌ ஒப்படையுங்கள்‌. அது சிறப்பாக முடியும்‌. பொன்‌, பொருள்‌ கிடைக்கும்‌. சகோதரிகள்‌ மிக உறுதுணையாக இருப்பர்‌. செல்வாக்கு அதிகரிக்கும்‌. புதிய வீடு-மனை வாகனம்‌ வாங்க அனுகூலம்‌ உண்டு.

உத்தியோகம்‌: இடமாற்றம்‌ வர வாய்ப்பு உண்டு. வேலையில்‌ பொறுமையும்‌ நிதானமும்‌ தேவை. உங்கள்‌ பொறுப்புகளை தட்டிகழிக்காமல்‌ செய்யவும்‌. மேல்‌ அதிகாரிகளிடம்‌ அனுசரித்து போகவும்‌. அதிகமாக போராடியே கோரிக்கைகளைநிறைவேற்ற முடியும்‌.

நெருப்பு தொடர்பான வேலையில்‌ இருப்பவர்கள்‌ சற்று கவனமாக இருக்க வேண்டும்‌. ஜுன்‌ 20-ந்‌ தேதி முதல்‌ நவம்பர்‌ 16-ந்‌ தேதி வரை நல்ல பலனை எதிர்நோக்கலாம்‌. முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்‌. வக்கீல்களுக்கு 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு வழக்கு, விவகாரங்கள்‌ சிறப்பாக இருக்கும்‌. சக பெண்‌ ஊழியர்கள்‌ மிகவும்‌ ஆதரவுடன்‌ இருப்பர்‌.

வியாபாரம்‌: பொருள்‌ விரையம்‌ ஏற்படும்‌.வாடிக்கையாளரை அதிக முயர்ச்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும்‌. சிலர்‌ ஊர்‌ விட்டு ஊர்‌ செல்லும்‌ நிலை உருவாகும்‌. இருப்பிட மாற்றம்‌ ஏற்படலாம்‌. குடும்ப பிரச்சினையை தொழிலில்‌ காட்டாமல்‌ இருந்தால்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையலாம்‌. நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்‌. மறைமுக பகைவர்களால்‌ அவ்வப்போது இடையூறுகள்‌ வரலாம்‌. எனவே அவர்கள்‌ பக்கம்‌ ஒரு கண்‌ இருப்பது நல்லது.

இருப்பினும்‌ இந்த காலகட்டத்தில்‌ ராகுவின்‌ பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு 3-இடத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையும்‌. தொழில்‌ ரீதியாக வெளியூர்‌ பயணம்‌ சென்றவர்கள்‌ வீடு திரும்புவர்‌. எதிரிகளால்‌ இருந்து வந்த முட்டுக்கட்டைகள்‌ விலகும்‌. பொருளாதார வளம்‌ கூடும்‌.

கலைஞர்கள்‌: புதிய ஒப்பந்தம்‌ பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்‌.

அரசியல்வாதிகள்‌

பொதுநலசேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. சிலர்‌ மனஉழைச்சலுடன்‌ காணப்படுவர்‌. மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை எதிர்பார்த்த புகழ்‌ பாராட்டு கிடைக்கும்‌. பெண்களின்‌ ஆதரவும்‌, ஆலோசனையும்‌ கிடைக்கும்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு அரசியல்வாதிகள்‌ சிறப்பு அடைவர்‌. புதிய பதவி தேடி வரும்‌. முக்கி ய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது

மாணவர்கள்‌:

ஆசிரியர்கள்‌ ஆலோனைபடி நடந்தால்‌ முன்னேற்றம்‌ கிடைக்கும்‌.ஜுன்‌20-ந்‌ தேதி முதல்‌ நவம்பர்‌ 16-ந்‌ தேதி வரை ஆசிரியர்கள்‌ ஆலோசனை கிடைக்கும்‌. போட்டி பந்தயங்ளில்‌ வெற்றி காண்பர்‌.

விவசாயிகள்‌:

உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம்‌. கால்நடை வகையில்‌ எதிர்பார்த்த பலனை பெறஇயலாது. ராகுவின்‌ பார்வையால்‌ புதிய தொழில்‌ நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பானமகசூலை பெறுவர்‌. நவீன இயந்திரங்கள்‌ வாங்க வாய்ப்பு உண்டு வழக்கு விவகாரங்களில்‌ மெத்தனமாக இருக்க வேண்டாம்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு வழக்கு, விவகாரங்கள்‌ சிறப்பாக இருக்கும்‌. கைவிட்டு போன பொருட்கள்‌ மீண்டும்‌ கிடைக்கும்‌.

பெண்கள்‌:

குடும்பத்தாரிடம்‌ விட்டுக்‌ கொடுத்து போகவும்‌. வெளியில்‌ பலவேறு விஷயங்களில்‌ பெருமையாக பேசப்பட்டாலும்‌ வீட்டில்‌ விட்டுக்‌ கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால்‌ வீண்மன உளைச்சலுக்கு ஆளாவிகள்‌.சுய தொழில்‌ செய்து வரும்‌ பெண்களுக்கு லாபத்தில்‌ குறை இருக்காது. வேலைக்கு செல்லும்‌. பெண்கள்‌ அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு உற்சாகம்‌ பிறக்கும்‌. மகிழ்ச்சியுடன்‌ காணப்படுவர்‌.பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. பெற்றோர்‌ வீட்டில்‌ இருந்து பொருட்கள்‌ வரப்பெறலாம்‌. சகோதரர்கள்‌. மிகவும்‌ ஆதரவுடன்‌ இருப்பர்‌. அவர்களால்‌ பண வரவு இருக்கும்‌.

உடல்நலம்‌: ஒருவித பயம்‌ ஆட்கொள்ளும்‌. வயிறு தொடர்பான உபாதை வரலாம்‌.மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்தேதி வரை உடல்‌ உபாதைகள்‌ பூரண குணம்‌ அடையும்‌. உங்களிடம்‌ இருந்த சோர்வு அடியோடு மறையும்‌.

பரிகாரம்‌: வென்னி செவ்வாய்க்‌ கிழமைகணில்‌ பத்திரகரணி அம்மனை வழிபடுங்கன்‌. விநாயகர்‌ மற்றும்‌ அஞ்சநேயர்‌ வழிபாடு உறுதுணையாக இருக்கும்‌. ஊனமுற்றவர்களுக்கும்‌, கணவரை இழந்து தவிக்கும்‌ பெண்களுக்கும்‌ 1 இயன்ற உதவியை செய்யுங்கள்.

First published:

Tags: Gurupeyarchi