புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கிருஸ்துவ மக்களும் தங்களுடைய கவலையை மறந்து மகிழ்ச்சியாக அனைவரிடமும் அன்பை பரிமாறிக்கொள்ள
கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு பண்டிகைக்கும் நிச்சயமாக ஒரு காரணம் இறுக்கும். அந்த வகையில் இந்த பதிவில் புனித வெள்ளி எதற்காக கொண்டாடப்படுதிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.இந்த வருடம் புனித வெள்ளி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை 15ஆம் தேதி (15.04.2022) வருகிறது.
புனித வெள்ளி என்றால் என்ன?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் தான்புனித வெள்ளி. புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நாளாகும். இயேசு சிலுவையில் மரித்ததையும். அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுதிறது. இந்த புனித வெள்ளி கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்.
புனித வெள்ளியின் வரலாறு
இயேசவின் சீடரான யூதாஸ் 30 வெள்ளி காசுக்காக இயேசுவை காட்டி கொடுத்தார். பின்ஜெருசலத்தில் உள்ள காவலர்களால் இயேசு கைது செய்யப்பட்டார். இயேசு முள் கிரீடத்தை அணிந்து கொண்டு. சிலுவையை சுமந்து கல்வாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் பல துன்பங்களையும் அடைந்தார். பின் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்று கூறப்படுகிறது. மீண்டும் இயேசு ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என்றும் வரலாறு கூறுகிறது. அதனால் இயேசு உயிர் நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும். மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேயாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.