முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடையாகுமா?

செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடையாகுமா?

அங்காரகன்

அங்காரகன்

ஒருவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம், 8-ம் இடம், 12-ம் இடம் (2, 4, 7, 8, 12) இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜாதகத்தில் உள்ள ராசி கட்டத்தில் லக்கனத்தில் இருந்து செவ்வாய் 1, 2, 4, 7, 8 மற்றும் 12ம் இடத்தில் இருந்தால், செவ்வாய் தோஷம். இதுபடி பார்த்தால், உலகத்தில் 50 சதவீதம் பேருக்கு செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும். ஆனால் இதில் சில விதி விலக்கு உண்டு. ஜாதகத்தில், செவ்வாய் 1, 2, 4, 7, 8 மற்றும் 12ம் இடத்தில் இருந்தாலும் கீழே சொல்லப்பட்ட கிரக நிலை அமைந்தால் அந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்று எடுத்து கொள்ள வேண்டும்.

  1. செவ்வாய் தனது சொந்த வீடான மேஷம் மற்றும் விருச்சிகத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.
  2. செவ்வாய் தனது உச்ச வீடான மகரத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.
  3. செவ்வாய் தனது நீச்ச வீடான கடகத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.
  4. செவ்வாய் சூரியன், தேய்பிறை சந்திரன், சனி, ராகு மற்றும் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலோ (அல்லது) பார்வை பட்டாலோ (அல்லது) அந்த கிரகங்களை பார்த்தாலோ செவ்வாய் தோஷம் கிடையாது.
  5. செவ்வாய் தீய ஸ்தான அதிபதியாக இருக்கும் கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ பார்வை பட்டாலோ அந்த கிரகங்களை பார்த்தாலோ செவ்வாய் தோஷம் கிடையாது.
  6. அதாவது மேலே குறிப்பிட்ட கிரக நிலைப்படி ஜாதகத்தில் செவ்வாய் 1, 2, 4, 7, 8 மற்றும் 12ம் இடத்தில் இருந்தாலும், அந்த ஜாதகம் செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகமே. இதன் படி, ஆயிரம் ஜாதகத்தில் ஒருவருக்கவே முழுமையான செவ்வாய் தோஷம் அமையும். ஆக, செவ்வாய் 1, 2, 4, 7, 8 மற்றும் 12ம் இடத்தில் இருந்தாலே அந்த ஜாதகத்தை செவ்வாய் தோஷம் என்று கூறுவது ஜோதிட அறிவு இல்லாதவர்கள் கூறும் செயலாகும். எனவே செவ்வாய் தோஷமானது நூறு சதவிகிதமானது யாருக்கும் இல்லை என்பதே நிதர்சனம்.

    மேலும் படிக்க...ஏழரைச் சனி என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு வரும்?

    அதே சமயத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய  இடங்களில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும். மேலும் லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம்.

    செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதுதான் சரி.

    செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய அங்காரகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

     ஓம் வீரத்வஜாய வித்மஹே

    விக்ன ஹஸ்தாய தீமஹி

    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

     

    ஓம் அங்காரகாய வித்மஹே

    சக்திஹஸ்தாய தீமஹி

    தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

    ஓம் அங்காரகாய வித்மஹே

    சக்திஹஸ்தாய தீமஹி

    தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

    ஓம் லோஹிதாங்காய வித்மஹே

    பூமிபுத்ராய தீமஹி

    தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

     

     Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Temple