முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

கனவுகள் என்றால் என்ன?

நாம் உறக்கத்தில் கனவு காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலனுண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம்தான் எனவும் கூறுகின்றனர். மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன எனவும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன.

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

நாம் காணும் கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். மாலை 6 மணிமுதல் 8.24 மணிக்குள் காணும் கனவு ஒரு வருட காலத்திலும், இரவு 8.24 மணிமுதல் 10.48 மணிக்குள் காணும் கனவு 3 மாதங்களிலும், இரவு10.48 மணிமுதல் நள்ளிரவு 1.12 மணிக்கு காணும் கனவு 1 மாத காலத்திலும், நள்ளிரவு 1.12 மணி முதல் அதிகாலை 3.36 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் காணும் கனவு 10 நாள்களிலும், அதிகாலை 3.36 மணிமுதல் விடியல் காலை 6.00 மணிக்குள் காணும் கனவுகள் உடனடியாக பலிக்கும் என பஞ்சாங்க சாஸ்திரங்களில் குறிபிடப்பட்டுள்ளன. பகல் கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லையாம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்

1. இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

2. இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

3. இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள். சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் படிக்க... இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா?

4. இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.

5. இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.

6. நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.

7. இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.

8.இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.

9. நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.

10. இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.

11. இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

12. இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.

13. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

14. இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள்.

15. தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

மேலும் படிக்க... மச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

First published:

Tags: Dream