சபரிமலையில் இன்று முதல் 10 இடங்களில் தரிசனத்துக்கு நேரடியாக முன் பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. இதன் படி 10 மையங்கள் அமைக்கப்பட்டு நேரடியாக முன்பதிவு செய்யலாம் என கேரளா தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு இந்த வசதிகள் பயன்படுத்தும் வகையில் எருமேலி, நிலைக்கல், குமிளி மற்றும் திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரம் மகாதேவர் ஆலயம், கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் ஆலயம், வைக்கம் மகாதேவர் ஆலயம், கொட்டா ரக்கர ஸ்ரீ மஹா கணபதி கோவில், பந்தளம் வலிய கோயிக்கல் ஆலயம், பெரும்பாவூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம், கீழில்லம் மகாதேவர் கோவில் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக தரிசனத்துக்கு பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு ஆதார் கார்டு, அரசு அடையாள அட்டைகள் ஏதேனும் ஒன்று அல்லது பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று கைவசம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க... சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...
Sabarimala: சபரிமலைக்கு முதல் நாள் சென்ற பக்தர்கள் எத்தனை பேர் தெரியுமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sabarimalai