நான் காவல்துறையில் பணி புரிந்தபொழுது, எண்ணற்ற தற்கொலை வழக்குகளை சந்தித்திருக்கிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி, ஒவ்வொரு தற்கொலையும், ஒரு உடைந்துபோன குடும்பத்தை, அவர்களால் கண்டுபிடிக்க முடியாத விடைகளைத் தேடும் நிலையில் விட்டு விடுவதால் அது மிகுந்த துன்பத்தை தருகிறது. உடைந்த கனவுகள், சரியான நேரத்தில் தலையிட்டு காப்பாற்றியிருக்கலாம் மற்றும் ஒரு வாழ்க்கை முன்கூட்டியே பறிக்கப்பட்டுவிட்டது போன்ற உணர்வுகளே எஞ்சியிருக்கின்றன . நான் சந்தித்த சில காரணங்கள், அபத்தத்தின் உச்சங்களாக இருந்தன.
“நான் எனது படிப்பில் உங்களைத் ஏமாற்றிவிட்டேன். நான் மிகவும் வருந்துகிறேன்"
“என்னை யாரும் புரிந்து கொள்ள முடியாததால் நான் என் வாழ்க்கையில் தோல்வியடைந்து விட்டேன். எனவே, நான் இப்போது வேறு கிரகத்திற்குச் செல்கிறேன்”
“அனிதா (அல்லது பெயர் எதுவாக இருந்தாலும்) என்னைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். என் இறப்பு குறைந்தபட்சம் என் நேர்மையான அன்பை அவளுக்கு நிரூபிக்கும்”
இந்த தற்கொலைக் குறிப்புகளில் சிலவற்றை நீங்கள் படிக்கும்போது, உங்களைப் பற்றியும், மனிதநேயம் எப்படி ஆகிவிட்டது என்பதையும் நீங்கள் கண்டு மிகவும் பரிதாபப்படுவீர்கள். வாழ்க்கையின் மதிப்பை மதிப்பெண்களுடன் ஒப்பிட முடியுமா? நிச்சயமாக இல்லை. யாராவது தன்னை தான் பெற்ற மதிப்பெண்களுக்கு ஒப்பிட்டு, வாழ்க்கை இனி வாழத் தகுதியற்றது என்று நம்புகிறார்கள் என்றால், நம் மனிதநேயமற்ற தன்மை அவர்களை கைவிட்டுவிட்டது என்று நான் நம்புகிறேன். இந்த வகையான வழக்குகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன.
உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு இது நடந்திருக்கலாம் அல்லது உங்கள் தினசரி செய்தித்தாள்களில் இதை நீங்கள் படித்திருக்கலாம். இப்போது, இந்த அச்சுறுத்தலுக்கு ஒரு கூட்டு சிகிச்சையை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் தனக்கு 100 இளைஞர்களை (ஆண்கள்/பெண்கள்) தேசத்திற்காக கொடுக்குமாறு கேட்டதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறார். அவற்றைப் பெற முடிந்தால், அவர் தேசத்தின் விதியை மாற்ற முடியும் என்று உறுதியளித்தார். அவர் சொன்ன வரிகளை நாம் மிகவும் கவனமாகப் படித்தால் அல்லது அவரை உண்மையாகப் புரிந்துகொள்ள நாம் கொஞ்சம் முயற்சி செய்தால், அவர் ‘ஏதோவொரு’ 100 இளைஞர்களை (ஆண்கள்/பெண்கள்) கேட்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்வோம். அவர் நல்ல உடல் தகுதியுடைய, சுறுசுறுப்பான மனமுடைய, ஆன்மீக ரீதியாக வளர்ந்த ஒரு குறிப்பிட்ட பழங்குடியை விரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் கலாச்சாரத்தில் அந்த பழங்குடியை உருவாக்க முடியாததால் சுவாமி விவேகானந்தரை தொடர்ந்து வீழ்த்தி வருகிறோம்.
மனவளம் என்பதன் பொருள், மன மற்றும் சமூக நலனைக் குறித்தும், வாழ்க்கையை அனுபவிக்கும் திறனை மேம்படுத்தவும், நாம் எப்படி உணர்கிறோம், சிந்திக்கிறோம், செயல்படுகிறோம் என்பதற்கான நேர்மறையான உணர்வுகளை கொண்டிருப்பது பற்றியது. சுயநிர்ணய உரிமைக்கான நமது உள்ளார்ந்த திறனுக்கு இது பங்களிக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட சிந்தனை மற்றும் நடத்தைக்கு சமூக காரணிகளுடன் தொடர்புடையது என்பதால் இந்த உளவியல் ரீதியான சமூக நல்வாழ்வு முக்கியமானது.
இப்போது, இந்த இடத்தில் தெளிவு ஏற்படுத்துவதற்காக பரவலாக அறியப்பட்ட ஒரு மனிதனின் அறியப்படாத வாழ்க்கையை எடுத்துக்கொள்கிறேன். ஒரு மாணவர் ஒரு நூற்றாண்டு மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு எண் 2275 உடன் பம்பாய் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வை எடுத்தபோது, அவர் சராசரியாக 40% உடன் 247.5 / 625 மதிப்பெண் பெற்று 799 பேரில் 404 இடத்தைப் பிடித்தார். இந்த மாணவர் தனது வாழ்க்கையில் ஒரு அசாதாரண மனிதராக மாறுவார் என்று அவருக்கு முன் இருந்த அனைத்து தரவரிசைதாரர்களும் அப்போது அறிந்திருக்கவில்லை. அவர் தனது மதிப்பெண்களால் அல்லாது அவரது சுய விருப்பத்தாலும், ‘ஆத்மா சக்தியினாலும்’ உருவாக்கப்படுவார் என்று. ஆனால் அடுத்த 20 நாட்களில் அவரது வாழ்க்கையின் நடந்த அனுபவங்கள் உலகம் இதற்கு முன் பார்த்ததிராத ஒரு நபராக ஆக்கும். மகாத்மா காந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்ட அவர் இல்லாமல் நாம் இப்போது எங்கிருப்போம் என்பது நமக்கு தெரியும். தனது சொந்த சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றின் தொடர்புகளை அனுபவிப்பதன் மூலம் தனது மன தகுதியை மகாத்மா காந்தி வளர்த்துக் கொண்டதற்கான தெளிவான நிகழ்வு இது.
இந்த பாடம் அல்லது எண்ணற்ற மற்ற பாடங்களை சொல்ல நாம் அக்கறை எடுத்து கொண்டிருந்தால், எந்த மாணவரும் மதிப்பெண்களுக்காக ஏன் தற்கொலை செய்து கொள்வார்.
எந்தவொரு மாணவரோ அல்லது ஒரு வயது வந்தோரிடம் வாழ்க்கை என்பது தோல்வியுறதான் என்று அவரிடம் சொல்ல நாம் அக்கறை கொண்டிருந்திருந்தால் தனது உயிரை ஏன் மாய்த்துக் கொள்ள போகிறார். மிகப் பெரிய மனிதர்களில் மிகச் சிறந்தவர்களை எடுத்துக் கொண்டாலும், அவர்களின் வாழ்க்கையின் 95% தோல்விகளைப் பற்றியதுதான். அந்த படு தோல்வியே கூடுதல் வீரியத்துடன் அவர்கள் மீண்டும் குதிக்க வைத்து நம் மனிதகுலத்திற்கு அதிசயங்களை உருவாக்க வைத்திருக்கிறது.
காதலுக்காக ஒருவர் வாழ்க்கையை முடித்து கொள்வதா? அப்பொழுது மிகச்சிறந்த காதல் திருமணங்கள் தோல்வியடைந்திருப்பதை பற்றி என்ன சொல்வது?
மனவளத்தை வளர்ப்பதென்பது இந்த விஷயங்களில் சிலவற்றை சரியாகப் பெறுவது - நமது புலனுணர்வை (perception) சரியாகப் பெறுவது; தோல்விகளைத் தழுவுதல்; வாழ்க்கையில் வெற்றி அல்லது எதையும் ஒரு நிகழ்வாக மட்டுமே எடுத்துக்கொள்வது; இறுதியாக நம்மை தூங்க விடாமல் செய்யும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பது. நிச்சயமாக, தியானம், பிராணயாமா, ஆழ்ந்த சுவாசம் நமக்கு உதவும். இவற்றை முந்தைய கட்டுரைகளில் விரிவாக விவரித்தோம்.
புலனுணர்வை சரியாகப் பெறுவதென்பது, எதிர்மறைகளில் இருந்து நேர்மறைகளைப் பார்க்க நம் மனதைப் பயிற்றுவிப்பதும், நாம் ஒரு நேர்மறையான சூழ்நிலையில் இருக்கும்போது எதிர்மறைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் ஆகும். நாம் இதைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், 'நேர்மறை' மற்றும் 'எதிர்மறை' இரண்டும் மனதின் உள்உணர்வுகள். நீங்கள் ஒரு ரயில் அல்லது விமானத்தைத் தவறவிட்டால், இது உங்களுக்கு எதிர்மறையான சூழ்நிலையாகும். இப்போது அதை நேர்மறையாகக் காண உங்கள் மனதைப் பயிற்றுவிக்கலாம். அதே சூழ்நிலையை நீங்கள் "கடவுளுக்கு நன்றி, சர்வவல்லவர் எனக்கு ஏதாவது நடப்பதைத் தவிர்க்க விரும்பியதால் நான் அதைத் தவறவிட்டேன்" என்றும் காணலாம். அதேபோல், ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு நிகழும்போது, “ஓ. இது மிகச் சிறந்தது. இது கூட கடந்து செல்லும் என்பதால் இந்த தருணத்தை இப்பொழுதே அனுபவிக்கிறேன்" என்று உங்களிடம் சொல்ல உங்கள் மனதைப் பயிற்றுவிக்கவும்.
தோல்விகளைத் தழுவுவது என்பது வெற்றி என்பது எட்டும் தூரத்தில்தான் தான் இருக்கிறது என்று நம்புவதாகும். அந்த தோல்வியிலிருந்தும், தெளிவான பற்றின்மையுடனும் புரிந்து கொள்ள வேண்டியது - இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ளலாம்? இப்போது என்ன வேலை செய்யவில்லை? அதை சிறப்பாக செய்ய நான் எதை மாற்ற வேண்டும்? நாம் உண்மையிலேயே தோல்வியைத் தழுவி, நம் மன தசைகளை கடுமையாக்கத் தயாராக இருந்தால் மட்டுமே இது நிகழும்.
பொதுவாக, நம் வாழ்க்கையை கொடுக்க நாம் தயாராக இருப்பதற்கான காரணம் ‘என்னை’ விட பெரியதாக இருந்தால், நாம் வெற்றியையும் தோல்வியையும் மீறும் அந்த மட்டத்தில் நமது மன உறுதி வேறு நிலையில் இருக்கும். அதனால்தான் காந்தி நமது சுதந்திரத்தை பெற 1947 வரை 32 ஆண்டுகளாக (அவர் 1915 இல் இந்தியாவில் இறங்கினார்) தனது உந்துதலைத் தொடர முடிந்தது. அவர் மனரீதியாக மிகவும் உறுதியாக இருந்ததனால், தோல்வியை தோல்வியாக பார்க்க அவர் மறுத்துவிட்டார். அவர் மேற்கொண்ட லட்சியம் அவரை விட மிகப் பெரியது என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து செல்ல விரும்பினார். அது ‘அவரை’ பற்றி அல்ல, ‘நம் அனைவரையும்’ பற்றியது. இதுபோன்ற பல வருட கடின உழைப்பால்தான், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ‘மகாத்மா’ காந்தி ஆனார்.
இப்போது, நாம் கற்றுணர வேண்டிய பாடம் இதுதான் - நாம் உண்மையிலேயே தயாராக இருந்தால் மட்டுமே, நம்மிடமிருந்து அதிகமான காந்திகளை உருவாக்க முடியும்! அதை செய்வோம்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.