உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது ஒரு அடிப்படை தேவையாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 75 சதவீத வீடுகளில் குடிநீர் இல்லை. எனவே, தண்ணீரை பாதுகாப்பது அவசியமானது.
பூமியில் ஒரு குறிப்பிட்ட அளவு நீர் மட்டுமே உள்ளது, அதனை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். தண்ணீரை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அதை சரியாகப் பயன்படுத்துவது பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வுடன், நாம் ஒவ்வொருவரும் நம் பங்களிப்பைச் செய்யலாம்.
நீர் பாதுகாப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில வழிகள் :
நீரை சேமிக்க வேண்டும், நீர் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மக்களும், சமூகங்களும் ஒன்றிணைந்தால் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறையை நாம் தவிர்க்க முடியும்.
தொழிற்சாலைகள் அதிகரிப்பு, அதிக மக்கள் தொகை மற்றும் அதிகப்படியான தண்ணீரைப் பயன்படுத்துவதால், தண்ணீர் பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டுள்ளது.
நீர் சுழற்சியின் மூலம் நீர் இறுதியில் பூமிக்கு திரும்பினாலும், அது எப்போதும் ஒரே இடத்திற்குத் திரும்பாது. எனவே, குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம், இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலமும் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் முடியும்.
தண்ணீரை சேமிப்பதன் மற்றொரு நன்மை என்னவென்றால், அது சுற்றுச்சூழலுக்கும் உதவக்கூடும். நீர் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம், வீடுகள், வணிகங்கள், பண்ணைகளில் செலவழிக்கும் ஆற்றலையும், எரிபொருளையும் குறைக்க உதவலாம். இது மாசுபாட்டைக் குறைப்பதற்கும், புதைபடிவ எரிபொருள் வளங்களைப் பாதுகாப்பதற்கும் உதவுகிறது.
இதனிடையே ஒவ்வொரு ஆண்டும், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. தண்ணீர் சேமிப்பு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் கட்டாயம் உருவாகும் என நீர்வள நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீதிகளில் ஆறாக ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் இன்று, குடிக்க கிடைக்காமல், மக்களை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது. குடிநீர் பற்றாக்குறைக்கு வறட்சி காரணம் காட்டப்படுகிறது. ஆனாலும், அதிகப்படியான மழை பெய்யும் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்காமல் குளம், குட்டைகளை வறண்டு போக செய்து குடியிருப்புகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். மேலும் துார்வாரப்படாத ஏரி, குளம், குட்டைகள், ஆறுகளில் ஆக்கிரமிப்பு, தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நீர் பற்றாக்குறை மட்டுமின்றி, நிலத்தடி நீரையும் மாசுபட வைத்துள்ளது.
உலகின், 77 சதவீதம் பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. 23 சதவீத நிலப்பரப்பில் ஏரி, குளம், ஆறுகள் இருந்தும் குடிநீராக வெறும் 2.3 சதவீத நீர் மட்டுமே பயன்படுகிறது. இன்றைய சூழலில், புவி வெப்பமயமாதல் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது. சாதாரணமாக ஆயிரம் அடிக்கு கீழே தான் நீர் கிடைக்கிறது. எனவே தற்போதாவது நாம் விழிப்புணர்வுடன் நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம் என உறுதி ஏற்போம்.
இதுபோன்ற முயற்சிகளை செய்ததற்காக, நியூஸ் 18 ஹார்பிக் இந்தியாவுடன் மிஷன் பானி முன்முயற்சிக்காக ஒத்துழைத்துள்ளது, இது சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mission Paani, Save Water