அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நிர்வாகிகள் கடுமையாக கோஷங்களை எழுப்பினர். அந்த பொதுக்குழு கூட்டம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி அவர் வெளிநடப்பு செய்து வெளியே வந்தார். அவர் மீது நிர்வாகிகள் தண்ணீர் பாட்டிலை வீசினர். ஒற்றை தலைமை கோரிக்கைக்கு ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்.
பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி ஒருவரை ஒருவர் வசைபாடிவருகின்றனர். இருதரப்பு ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்களுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் அ.தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனார். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டக் கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சின்னையா அம்பலம் உட்பட 500-ககும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்தை அவமதித்த சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகளைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
செய்தியாளர்: சிதம்பரநாதன், சிவகங்கை.
உங்கள் நகரத்திலிருந்து(சிவகங்கை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.