சிவகங்கை அருகே நின்றுகொண்டிருந்த பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த புஷ்பம், பாக்கியம், கலையரசி, கயல்விழி, அகல்யா ஆகியோர் ஷேர் ஆட்டோவில் வஞ்சிநகரத்தில் உள்ள உறவினர்கள் இல்ல விழாவில் கலந்துகொள்ள சக்கந்தி வழியாக சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை கருப்பு என்பவர் ஓட்டினார்.
சக்கந்தி அருகே சென்றபோது ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் மோதியது.இதில் ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Sivagangai