அமைச்சர் பேசிக் கொண்டு இருக்கும் போதே தூக்கம் போட்ட அரசு அதிகாரிகள்... சிவகங்கையில் மெத்தனம்..
அமைச்சர் பேசிக் கொண்டு இருக்கும் போதே தூக்கம் போட்ட அரசு அதிகாரிகள்... சிவகங்கையில் மெத்தனம்..
அமைச்சர் பேசிக் கொண்டு இருக்கும் போதே அசந்து தூங்கிய அதிகாரிகள்...
Sivagangai District : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ வேலு பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசிக்கொண்டிருந்த போதே தூங்கிக் கொண்டிருந்த டிராபிக் போலீஸ் அதிகாரிகள்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை, அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட 5 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றதுடன் ஏராளமான பொது மக்களும் பங்கேற்று விபத்து தடுப்பு குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு இந்த ஆய்வு கூட்டத்தை 5 துறைகளும் இணைந்து நடத்த வேண்டும். இது தெரியாமல் யார் நடத்துவது என்கிற போட்டியில் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் திராவிட மாடல் அரசு அமைந்த பின்னர் நம்முடைய முதல்வர் என்னை அழைத்து விபத்தில்லா தமிழகம் அமைத்திட வழிவகை செய்ய கூறினார். அதன் பின்னரே இந்த ஆய்வு கூட்டம் ஒவ்வொரு மாவட்டமாக நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
அமைச்சர் பேசிக் கொண்டு இருக்கும் போதே அசந்து தூங்கிய அதிகாரிகள்...
மேலும் முன்னதாக விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சிப்பவர்களை வழக்கில் இணைத்து நீதிமன்றத்திற்கு அலையவிடும் நிகழ்வுதான் இருந்தது. நெடுஞ்சாலைகளில் உள்ள மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை சேர்த்தால் அவர்கள் பணம் சம்பாதிப்பதையே முதல் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள் இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படுகிறது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு
இது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தேன். அதன் பின் மறு நாள் காலையிலேயே முதல்வர் அறிவித்த திட்டம்தான் இன்னுயிர் காப்போம் என்கிற திட்டம். நம்முடைய முதல்வரின் முத்தான திட்டம் அது. இந்த திட்டத்தின் கீழ் நேற்று வரை 83,501 பேர் விபத்து ஏற்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர் என விளாவாரியாக பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைச்சர் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் அப்போது, ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அதிகாரிகள் ஆங்காங்கே தூங்கிக் கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் அரசு அதிகாரிகள்..
அமைச்சர் சாலை பாதுகாப்பு குறித்து எவ்வளவோ விளக்கமாக கூறியும் தூங்கிக் கொண்டிருந்ததால் அமைச்சர் என்ன பேசினார் என்று கூட தெரியாமல் அரசு அதிகாரிகள் தூங்கியது சர்ச்சையை கிளப்பிள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.