கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பாஜக மாநில விவசாயி அணி துனை தலைவர்மீது மோசடி புகார் எழுந்த நிலையில், சட்டீஸ்கர் மாநில போலீசார் அவரை கைது செய்ய தமிழகம் வந்தனர். ஆனால் அவர் தலைமறைவானர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்தவர் எஸ். ஆர். தேவர். இவர் தற்போது பாஜக மாநில விவசாயி அணி துனை தலைவராக உள்ளார். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பொத்ரா என்பவரிடம் ரூ.200 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 4 கோடி ரூபாய் பண மோசடி செய்ததற்காக வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை கைது செய்ய சத்தீஸ்கர் மாநில போலீசார் 4 பேர் எஸ்.ஆர்.தேவர் வீட்டிற்கு வந்தனர். ஆனால் தகவல் அறிந்த பாஜக நிர்வாகி எஸ். ஆர். தேவர் தலைமறைவான நிலையில், வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரது வீட்டில் கைது செய்ய பிடி வாரண்ட் நோட்டிஸ் ஒட்டி சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவர் மீது பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ள நிலையில், சில வழக்குகளில் முன்னதாக இவர் சிறை சென்றவர்.
Must Read : அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்
அதன்படி, எஸ். ஆர். தேவர் ஏற்கனவே மோசடி புகாரில் ஆந்திர போலீசார் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - முத்துராமலிங்கம், காரைக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Crime News, Karaikudi, Sivagangai