சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ஊமகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற செந்தில்குமார் (வயது 43). இவருக்கு சங்கீதா (வயது 30) என்ற மனைவியும், தேவராஜ் (வயது 14) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருக்கின்றனர்.
குடிப்பழக்கம் அதிகம் உள்ள சேட்டுக்கு செம்மாண்டப்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் பகுதியில் வீடு உள்ளது இங்கு இவர் மட்டும் தனியாக வசித்துக் கொண்டு அப்பகுதியில் டெம்போ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், அவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், ஓமலூர் பொறுப்பு டி.எஸ்.பி. இளமுருகன் ஓமலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடையங்கள் கண்டறிய சோதனை நடைபெற்றது. மேலும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது குடிபோதையில் சீட்டு விளையாடுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Must Read : கோயில் உண்டியல் மீதே அறநிலையத்துறைக்கு அக்கறை உள்ளது - அண்ணாமலை பேச்சு
இரவு நேரங்களில் அந்த வீட்டில் நண்பர்களுடன் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது போன்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Murder, Omalur, Salem