எடப்பாடி அருகே பூட்டிய குடிசை வீட்டிற்குள் நிர்வாண நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே குப்பம்பட்டி கோணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதா (வயது 45). இவர் கடந்த பத்து வருடங்களாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரும் இரண்டு மகன்களும் ஈரோட்டில் வசித்து வந்தனர். இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய கணவர் உயிரிழந்தார். மகன்கள் இருவரும் ஈரோட்டில் வேலை செய்து வருகின்றனர்.
குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த ராதா நாமக்கல் மாவட்டம் வெப்படையில் செயல்பட்டு வரும் தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தினமும் காலை 4.30 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 20.6.2022 அன்று ராதா கடைசியாக வேலைக்கு சென்று வந்ததாகவும், அருகில் இருந்தவர்களிடம் பேசி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் யாரும் பார்த்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ராதாவின் வீட்டில் இருந்து துர்வாடை வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முன்ணிலையில் வீட்டின் முன்பக்கம் மூடியிருந்த தடுக்கு கொட்டகையில் (கதவு போன்ற அமைப்பு) சைக்கிள் செயின் மூலம் பூட்டியிருந்த பூட்டிலேயே சாவியும் இருந்ததால், பூட்டை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்தபோது நிர்வாணமாக அழுகிய நிலையில் ராதாவின் உடல் சடலம் இருந்துள்ளது.
இதையும் படிங்க: சட்டைக்குள் கோட் அணிந்து பல லட்சம் ரூபாய் கடத்தல்- ஆந்திர இளைஞர் சென்னையில் கைது
இதனைத் தொடர்ந்து ராதாவின் உடலை கொங்கணாபுரம் காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.யாராவது பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சென்னையில் கார் மீது மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி
உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே ராதா கொலை செய்யப்பட்டு இறந்தாரா அல்லது இயற்கையாக உயிரிழந்தாரா என்பது குறித்து தெரியவரும். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.