முகப்பு /செய்தி /சேலம் / முத்துமலை முருகன் கோயிலில் முதலாம் ஆண்டு தைப்பூசம்.. அலைமோதிய பக்தர்கள் வெள்ளம்!

முத்துமலை முருகன் கோயிலில் முதலாம் ஆண்டு தைப்பூசம்.. அலைமோதிய பக்தர்கள் வெள்ளம்!

முத்துமலை முருகன்

முத்துமலை முருகன்

Salem muthumalai murugan temple | உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் கோவிலில் முதலாம் ஆண்டு தைப்பூசத்தை  முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem | Salem

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோயிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முருகனை காண ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலம், மாவட்டங்களிலிருந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த கோயிலில் முதலாம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதனையொட்டி முதல் நாள் முதலே சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு, முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்கபிஷேகமும் நடைபெற்றது.

இதனையடுத்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Murugan temple, Salem, Thaipusam