தன் மனைவியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை வாங்கி திருப்பி தர மறுப்பதால், மகன் மற்றும் மகள் மேற்படிப்பிற்காக கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் காரணம் என வங்கி நகை மதிப்பீட்டாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர், கடந்த பத்து வருடங்களாக மனைவி, மகன் மற்றும் மகளுடன் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பொன் நகர் பகுதியில் வசித்து வந்தார். இவர் ஸ்ரீரங்கபாளையம் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மோகன்தாஸ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே மோகன்தாஸ் மாரடைப்பால் இறந்துவிட்டார் என உறவினர்களுக்கு தெரிவித்து இறுதிச்சடங்கு செய்ய மோகன் தாஸின் உடலைை ஃப்ரீசர் பாக்சில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பு தற்கொலைக்கான காரணம் குறித்து மோகன்தாஸ் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து சம்பவம் இடம் விரைந்த போலீசார் மோகன்தாஸ் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: குடிக்கு அடிமையான காதல் கணவன்.. திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
மோகன்தாஸ் வெளியிட்ட வீடியோவில், தான் சம்பாதித்த பணம் மற்றும் நகையை தன் மனைவி இமாகுலேட் மேரியிடம் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவருடைய மகள் சுபா ஆகியோர் பெற்றுக்கொண்டு தர மறுப்பதாகவும், தன்னை அனைவரும் ஏமாற்றுவதாகவும் தற்போது தன்னுடைய மகன் மற்றும் மகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த நிலையில் மேற்படிப்புக்காக கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடைய தற்கொலைக்கு சாந்தி, சுபா மற்றும் சூரமங்கலத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி கடந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வுபெற்ற சேகர் ஆகிய மூன்று நபர்கள் தான் காரணம் என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பணம் தொடர்பாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையத்தில் பணிபுரியும் பாபு என்பவர் எதிர் தரப்பினருக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மசாஜ் சென்டரை நடத்திவந்த பெண்ணை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய போதைக் கும்பல் - கோவையில் பரபரப்பு
இதுகுறித்து டிஜிபி மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், யாரிடம் புகார் தெரிவித்தாலும் ஒன்றும் நடக்காது என கூறி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: திருமலை - சேலம்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.