முகப்பு /செய்தி /சேலம் / திமுகவில் மேலும் அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் : ஆர்.பி.உதயகுமார்

திமுகவில் மேலும் அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் : ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

திமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால்தான் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளனர் - ஆர்.பி.உதயகுமார்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  விமர்சித்துள்ளார்.

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சதவித உள்ஒதுக்கீடு மூலம் ஏழை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.

2011 முன்பு முதியோர் உதவித்தொகை 1200 கோடி  வழங்கினார்கள். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா 4500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஒரே உத்தரவில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவிதொகை வழங்க உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி தரப்பட்டது. ஆனால் இவற்றை எல்லாம் நிறுத்தியது திமுக அரசு.

Also Read : சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும் மாநகராட்சி நன்றாக வேலை செய்தால்தான் மீண்டும் ஆட்சியமைக்க முடியும் – அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சால் சிரிப்பலை

திமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால்தான் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளனர். அதிமுக ஆட்சியில் சிறந்த காவல்துறையாக இருந்த தமிழக காவல்துறை, தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் உள்ளது. திமுக அரசை விமர்சித்தால் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி சந்திப்போம்.

Also Read: இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா இனி தேர்தலில் பங்கேற்க கூடாது” - நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு பாஜக மனு

அதிமுக மனித புனிதரால் தொடங்கப்பட்ட, தெய்வசக்தி பெற்ற இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா, எடப்பாடியாரை வழிநடத்துகிறது.திமுகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடியாரால்தான் முடியும். அவர், மத்திய அரசிடம் இருந்து எத்தனை அழுத்தம் இருந்தாலும் மின்கட்டணம் உயர்த்தி ஏழைமக்களுக்கு சுமை தினிக்கக்கூடாது என்று எடப்பாடியார் கவனமுடன் இருந்தார். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் இரட்டை இலைதான் வெற்றிபெறும் என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

செய்தியாளர் : திருமலை தமிழ்மணி, சேலம்

First published:

Tags: ADMK, CM MK Stalin, DMK, RB Udayakumar, Salem