ராணிப்பேட்டையில் உள்ள ஆற்காடு வனச்சரக அலுவலகத்திற்கு உட்பட்டது பாணாவரம் காப்புக்காடு, இந்த பகுதியில் வனத்துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காப்பு காட்டு பகுதியில் மரம் வெட்டும் சத்தம் கேட்டதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது, அங்கிருந்தவர்கள் சட்ட விரோதமாக செம்மரத்தை வெட்டி, அதனை துண்டுகளாக வெட்டிக்கொண்டு இருந்ததை கண்ட வனசரக போலீசார் அவர்களை பிடிக்க சென்ற போது மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இவர்களை பின் தொடர்ந்து துரத்திக்கொண்டு சென்ற வனத்துறையினர் அவர்களுள் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சுமார் ஒரு டன் மதிப்புடைய 17 செம்மர துண்டுகளையும் வனசரக போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா தாடூர் கிராமம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(46) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த சம்பவம் குறித்து வனசரக அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், கடந்த 2014ஆம் ஆண்டு பாணாவரம் காப்புகாடு பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தும் போது இதே நபர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட விஜயகுமார் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
Must Read : கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேலும், இனிவரும் காலங்களில் செம்மரம் பகுதிகளில் அத்துமீறி நுழைவோர் மீதும், சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆற்காடு வனச்சரகர் வெங்கடேசன் உறுதிபட தெரிவித்தார்.
செய்தியாளர் - க.சிவா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrested, Crime News, Ranipettai, Smuggling