ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற வருவாய்த்துறையினர்.. 5க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் ராமநாதபுரத்தில் பரபரப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற வருவாய்த்துறையினர்.. 5க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் ராமநாதபுரத்தில் பரபரப்பு
ராமநாதபுரம்
Ramanathapuram District : ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் உள்ள நீர் நிலைப் புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றகோரி மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை எடுக்க வந்த அதிகாரிகளை அகற்றக்கூடாது என 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் சத்யா நகரில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்,. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர் தலைமையில், அதிகாரிகள் வந்தனர், அப்போது மின் வாரிய ஊழியர்கள் முற்பட்ட போது அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அகற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீடு, வாசல் இல்லா, நிலம் இல்லாத ஏழைகள் நாங்கள். எங்களை அகற்றினால் நாங்கள் தெருவில் இருக்கும் அவலம் உருவாகும். ஆகையால் தமிழக அரசு கருணை கூர்ந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என அதிகாரியிடம் வேண்டினர்,
அதிகாரிகள் தொடர்ந்து மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கைக்கு முற்பட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது,
இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் ஐந்து பெண்கள் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர்.
இதை அறிந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து காப்பாற்றினர், அதிகாரிகள் வீடுகளை அகற்றக்கூடாது. மின்சாரத்தை துண்டிக்க்கூடாது என 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர், இதில் 5க்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதால் பதட்டம் நிலவியது,
இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாற்று இடம் தேடிக் கொண்டிருக்கிறோம் எங்களுக்கு அவகாசம் தாருங்கள் எனக் கேட்டதையடுத்து, ஒரு மாத காலத்திற்குள் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர், இந்நிலையில் அப்பகுதி மக்கள் திரும்பி சென்றனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.