தொண்டியில் மீன்களின் விலை குறைந்துள்ளதால் கடற்கரையில் உள்ள மீன் மார்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பொங்கல் பண்டிகை காலம் என்பதால் மீன்கள், நண்டு, இறால், ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளதால் இராண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் தினத்தை அசைவ உணவுகளோடு கொண்டாடி மகிழ தொண்டி கடற்கரையில் உள்ள பேரூராட்சி மீன் மார்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் அதிகளவு குவிந்தனர்.
இயல்பாக மீன்களின் விலை கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 350 ரூபாய்க்கும், ரூ.800 விற்கப்படும் பெரிய இறால் ரூ.500க்கும், ரூ.400 விற்கப்படும் சிறிய இறால் ரூ.200க்கும், நண்டு கிலோ 300 ருபாய்க்கும் விற்கப்பட்டது.
இதனால் மக்கள் ஆர்வமாக சென்று மீன்களை வாங்கி செல்கின்றனர். கடற்கரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மார்கெட்டில் உள்ள மீன் கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல், மார்கெட்டிற்குள்ளேயே தேங்கியுள்ளது. இதனை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மீன் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fish, Local News, Ramanathapuram