ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 5 முனை பகுதியில் மதுக்கடையை திறக்க சில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதனை அடுத்து தினமும் குடிமகன்கள் அப்பகுதியில் குடித்துவிட்டு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் என அனைவரையும் கேலி செய்வதும் அவர்களுடன் தகாத முறையில் நடந்து கொள்வதும் வழக்கமாகவே உள்ளது.
இதே போல் நேற்று அப்பகுதியில் ஒரு குடிமகன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஐந்து முனை சாலை நடுவே படுத்துக்கொண்டு அட்டூழியம் செய்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்ட அப்பகுதிமக்கள் முகம் சுழித்த படி சென்றனர். இதனால் இந்த மதுக்கடையை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram, Tasmac