தமிழ்நாடு முழுவதும் அடுத்த 15 நாட்களில் 500 மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை மீனவ கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓரிக்கோட்டை, கீழக்கரை உட்பட 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இன்று ஒரே நாளில் 14 மருத்துவமனைகள் திறக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் அடுத்த 15 நாட்களுக்குள் 500 மருத்துவமனைகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி முடிவதற்குள் மாணவர்கள் மருத்துவர்களாகி விடுவார்கள் என்றார்.
செய்தியாளர்: பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ma subramanian, Minister, Ramanathapuram