முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / 40 வயசாச்சு இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல.. கிண்டல் பேச்சுகளால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு

40 வயசாச்சு இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல.. கிண்டல் பேச்சுகளால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு

ஆசிரியை ரேவதி

ஆசிரியை ரேவதி

கிண்டல் கேலிப்பேச்சுகளால் மனமுடைந்த ரேவதி விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியை எலிமருந்து சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோடை மாவட்டம் மாலையீடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 40). இவர் புதுக்கோட்டை இராணியர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். ரேவதியின் உடன்பிறந்தவர்களுக்கு திருமணமான நிலையில் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக ரேவதியுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் 40 வயதாகியும் ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை எனக் கேட்டு கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக மன் உளைச்சலில் இருந்த ரேவதி வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறி விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி காலை உணவு சாப்பிட்ட ரேவதி, சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.ரேவதிக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்த பெற்றோர்கள் ஆட்டோவில் அழைத்துச் சென்று அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Also Read: அரசுப்பள்ளி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு..  துண்டான விரல்கள் - கோவில்பட்டியில் பயங்கரம்

மருத்துவமனையில் ரேவதியிடம் பெற்றோர் விசாரித்தபோது, எல்லோரும் ஏன் திருமணமாகவில்லை என கேட்டு கேலி கிண்டல் செய்வதாகவும், இதனால் மனமுடைந்த நான் ஆன்லைன் மூலம் எலி மருந்து ஆர்டர் செய்து, அதை உணவில் கலந்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ரேவதியை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் ரேவதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ரேவதியின் தந்தை மாணிக்கம் தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் போரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.40 வயதாகியும் திருமணமாகவில்லை என சக ஆசிரியர்கள் கேலி கிண்டல் செய்ததால் ஆசிரியை எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ரியாஸ் (புதுக்கோட்டை)

First published:

Tags: Local News, Pudukkottai, School Teacher, Tamil News