புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் லெம்பலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்றார். அப்போது பள்ளிக்கு வந்த ஆட்சியரை வரவேற்பதற்காக மாணவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் காலணிகள் அணியாமல் வரிசையாக நின்றிருந்தனர். மாணவர்களின் கைத்தட்டு வரவேற்பை ஏற்ற ஆட்சியர் கவிதா ராமு, மாணவர்கள் காலணி அணியாமல் இருப்பதை அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து அங்கிருந்த ஆசிரியர்களை அழைத்து ஏன் மாணவர்கள் காலணி அணியாமல் நிற்கின்றனர் என கேள்வி எழுப்பினார். இதனை கேட்டு பதிலளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திருதிருவென முழித்தனர். மரியாதை நிமித்தமாக காலணியை கழட்ட சொல்லியிருப்பார்கள் என்பதை உணர்ந்த ஆட்சியர் கடுப்பாகி உடனடியாக மாணவர்களை காலணி அணிய சொல்லி உத்தரவிட்டார்.தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் காலணியை அணிந்து கொண்டனர். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களின் நெஞ்சை வருடியது.
செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai, School students