புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் போக்கு நடந்து வருவதாகவும் இதனை காவல்துறையினர் கண்காணிக்க தவறி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்கும் வளாகத்தில் நேற்று மாலை கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோர் இரு தரப்பாக பிரிந்து கட்டைகளால் மோதிக் கொள்ளும் காட்சிகளும் கும்பலாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு ஓடும் காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசாரிடம் கேட்டபோது மது போதையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர்களிடையே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து பரம்பூரைச் சேர்ந்த வினோத் என்ற ஒரு நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்து இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களிடம் விசாரணை மேற்கொள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் : ரியாஸ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puthukkottai, Viral Video