தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை வந்தபோது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கிறிஸ்தவ மதம் சார்ந்த புத்தகத்தை முதலமைச்சருக்கு வழங்கிய நிலையில், அது குறித்து அவரது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதற்கு பாஜக உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் நூலை வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தித்தில் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முதலமைச்சருக்கு ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற கிறிஸ்தவ மதம் சார்ந்த புத்தகத்தை வழங்கினார் ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் முதலமைச்சருக்கு வழங்கிய கிறிஸ்தவ நூலைப்பற்றி பதிவு செய்திருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் போட்டிருந்த பதிவை ஆட்சியர் நீக்கம் செய்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் வழங்கப்பட்டது
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் படத்தை ஆட்சியர் கவிதா ராமு திறந்துவைத்தார்.
Must Read : கேரள தங்க கடத்தல் விவகாரம்: பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்
அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் முரளி மற்றும் விஜயகுமார் தலைமையில் பாஜக வினர் கண்ணதாசன் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலை ஆட்சியர் கவிதா ராமுவுக்கு வழங்கிச் சென்றனர்.
செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை
உங்கள் நகரத்திலிருந்து(Pudukkottai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.