புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அரசு டாஸ்மாக் கடை பாரில் பணிபுரியும் ஊழியர் சில்லி சிக்கனை குறைவாக கொடுத்ததால் அவரை தாக்கி அங்கு உள்ள நாற்காலிகளை உடைத்த நபர் மீது கறம்பக்குடி போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி அரசு டாஸ்மாக் கடை பாரில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஒத்தியம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் சமையல் காரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அந்த பாருக்கு வந்த கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த அய்யர் என்பவர் 30 ரூபாய்க்கு சில்லி சிக்கன் கேட்ட நிலையில் சமையல் காரர் ராஜா குறைந்த அளவில் சில்லி சிக்கன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அய்யர் சமையல் காரர் ராஜாவை தாக்கி அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் பிளாஸ்டிக் டேபிளை அடித்து உடைத்து சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இது டாஸ்மாக் பாரில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் இது குறித்து பாரின் சமையல் காரர் ராஜா கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் கறம்பக்குடி போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு அய்யர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அய்யர் அரசு டாஸ்மாக் பாரின் நாற்காலிகளை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை.
உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.