கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் மாணவர்கள் தங்களது முடியை பல விதமாக அலங்காரம் செய்து கொண்டு சுற்றி திரிந்தனர். இந்த நிலையில் தற்போது பள்ளிகள் துவங்கியுள்ளன. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலையில் முடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.
இவர்களை பெற்றோர் கண்டித்தும் முடியை வெட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியை தன்ராஜ் தனது சொந்த செலவில் 2 முடித்திருத்துபவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து முடியை சீராக்கினார்.
இதனை தொடர்ந்து இதே போல் வெட்ட வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பள்ளியில் மாணவர்களுக்கு முடி வெட்டப்படும் என்று அவர் தெரிவித்தார். மாணவர்களும் அமைதியாக வெட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.