புதுச்சேரி கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் ராஜா(29). பிரபல ரவுடியான இவர் இன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் அம்மன் நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் அரங்கேறிய கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த, வில்லியனூர் போலீசார் விரைந்து வந்து ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலையான ராஜா கார் டிரைவராக பணிபுரிந்து வந்ததும், அவருக்கு அம்சா (36) என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும், 1 ஆண் மகனும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், ராஜா மீதுள்ள வழக்கிற்கு பழிதீர்க்கும் வகையில் அவரை கொலை செய்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நடுரோட்டில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Puducherry