எலி பேஸ்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரி சாரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், கூலி தொழிலாளியான இவருக்கு திவ்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இவர் வீட்டில் எலி தொல்லை அதிகமாக உள்ளதால் எலி பேஸ்ட் வாங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த திவ்யா சாக்லேட் என்று நினைத்து எலிபேஸ்ட் சாப்பிட்டாள். இதனையடுத்து பெற்றோர்கள் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எலி பேஸ்டால் உயிரிழப்பு ஏற்படுவதால் மாநிலம் முழுவதும் இதனை விற்பனை செய்வதற்கு தடை செய்ய வேண்டும் தொடர்ந்து மக்களின் கோரிக்கை ஆகவே உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Puducherry