பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ரூ.470 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலா பயணிகளின் வருகை உயர்ந்து அரசுக்கு வருவாய் உயர்ந்துள்ளதாகவும், ஓராண்டில் தங்கள் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அறிவித்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறிய அவர், அரசின் எந்த உதவியும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த திட்டம் அடுத்த மாதம் ஜனவரி முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், பொங்கலையொட்டி அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொஙகல் பரிசு பொருட்கள் தொகுப்பின் மதிப்பான ரூ.470 அங்கன்வாடி மூலம் தரப்படும் என்றும், நான்கு மாத அரிசி பணம் மொத்தமாக சேர்த்து சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2400ம், மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கு ரூ.1200ம் பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் முக்கியம் என்றும் அதற்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று திட்டவட்டமாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Pongal Gift, Puducherry, Ration card