புதுச்சேரி நெல்லிதோப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்வநாயகி (52), புதுச்சேரி மாசுகட்டுபாட்டு வாரியத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் மீட்டர் திருடு போய் உள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் மீட்டரை திருடி பேண்டிற்குள் மறைத்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து, இது குறித்து அவர் சிசிடிவி காட்சிகளுடன் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிசிடிவி கேமிராவில் பதிவான நபரை அடையாளம் கண்டனர்.
பெரியார் நகர் பகுதியில் சுற்றி திரிந்த அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (46), என்பதும் பெயிண்டராக பணிபுரியும் அவர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் இருந்ததாகவும், செலவிற்கு பணம் தேவைபட்டதாலும் தண்ணீர் மீட்டரை திருடியதாக ஒப்புக்கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். செலவுக்கு பணமில்லை என கூறி இருசக்கர வாகனம், இரும்பு பொருட்கள், பேட்டரி என திருடிய நிலை போய் 500 ரூபாய் கூட மதிப்பிலாத மீட்டரை திருடுவது மிக வேதனையானது என போலீசார் தெரிவித்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.