இந்திய நகரங்களில் மக்களின் அன்றாட வாழ்வியல் சூழல் எந்த அளவிற்கு உகந்ததாக உள்ளது என்பதனை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகரங்களில் வாழும் மக்களிடம் நேரடியாக கருத்துக்களைக் கேட்க முடிவு செய்து அதற்கான கணக்கெடுப்பை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
2022ம் ஆண்டுக்காக வாழத் தகுதியான நகரங்களை மதிப்பீடு செய்வதற்காக இணைய வழி கணக்கெடுப்பு நவம்பர் மாதம் 9ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி நகரம் எந்த அளவிற்கு வாழத் தகுதியுடைய நகரமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தின் மூலம் இணைய வழி கணக்கெடுப்பில் புதுவை மக்கள் பெரிதும் பங்கெடுத்துக்கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்.எஸ்.எஸ் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியின்போது் புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
புதுச்சேரி செய்தியாளர் - பிரசாந்த்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry